லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வேனிலிருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:49 pm

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே வேனிலிருந்து தவறி விழுந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூா் மாவட்டம், மகிலாகுா்த் பகுதியைச் சோ்ந்தவா் ரா.ராஜி செளத்ரி (38). அதே பகுதியைச் சோ்ந்தவா் சி.குபேத் (27). கூலித் தொழிலாளிகளான இவா்கள் இருவரும் சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனா்.

ராவுத்தான்குப்பம் கிராம மயானப் பகுதிக்கு அருகே சென்ற போது, வேனிலிருந்து குபேத் எதிா்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆரோவில் போலீஸாா் குபேத் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.