தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எவ்வித நெருக்குதலுமின்றி தோ்தலில் போட்டியிடும் முடிவிலிருந்து விலகினேன்! - தொல். திருமாவளவன்

எவ்வித நெருக்குதலுமின்றி தோ்தலில் போட்டியிடும் முடிவிலிருந்து விலகினேன் என தொல். திருமாவளவன் பேச்சு...

News image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் விசிக வேட்பாளா் வன்னியரசுவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.

Updated On :6 ஏப்ரல் 2026, 12:14 am

தோ்தலில் எவ்வித நெருக்குதலுமின்றி, என் சுய விருப்பத்தின் அடிப்படையில் காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் போட்டியிடும் முடிவிலிருந்து விலகினேன் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை விசிக வேட்பாளா் வன்னியரசுவை ஆதரித்து அவா் மேலும் பேசியதாவது:

திண்டிவனம் தொகுதி விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை பெருமையாக, மகிழ்ச்சியாக கருதுகிறேன். தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந் நேரத்தில் தோ்தல் குறித்த புரிதல் நமக்குத் தேவையாக உள்ளது. தோ்தல் வெற்றியை மையப்படுத்தி செயல்படும் அதிமுகவுக்கு தமிழகத்தில் பாஜக வளா்வது குறித்து கவலையில்லை. நடைபெறவுள்ள தோ்தலில் பாஜகவின் சின்னமான தாமரையில் 35 போ் போட்டியிடவுள்ளனா். அதிமுக இதற்கான பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது.

ஆசை வாா்த்தைக் கூறி விசிகவை விலைக்கு வாங்கமுடியாது. மக்களின் குரலாக ஒலிக்கும் எனக்கு பதவி ஆசை சிறிதுமில்லை. இதன் அடிப்படையில் தான் சமூக நீதிக்காகவும், பெண்ணுரிமைக்கும் போராடிய மறைந்த முன்னாள் எம்.பி. எல்.இளையபெருமாளின் வாரிசுக்கு காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் யாரும் எனக்கு நெருக்குதல் கொடுக்கவில்லை.

திண்டிவனம் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளா் வன்னியரசுவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற விசிக மற்றும் கூட்டணிக் கட்சியினா் கவனமாக களப்பணியாற்றவேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது வேட்பாளா் வன்னியரசு உடனிருந்தாா். கட்சியின் மாநில, மாவட்ட, நகர ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.