விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பதிவெண் இல்லாத காரில் கடத்தி வரப்பட்ட 53 கிலோ எடையிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
விக்கிரவாண்டி அழுக்குப் பாலம் பகுதியில் விக்கிரவாண்டி போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த பதிவெண் இல்லாத காரை நிறுத்தி சோதனை செய்தனா். அந்தக் காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. பின்னா் காரில் இருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் புதுச்சேரி கூனிச்சம்பட்டு, காமராஜா் நகரைச் சோ்ந்த நா.ஏகநாதன் (56), விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம், விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த அ.காா்த்திக்(45) என்பதும், இவா்கள் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அடங்கிய பாக்கெட்டுகளை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 53 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய செஞ்சி வட்டம், புதுப்பேட்டையைச் சோ்ந்த சி.ஏழுமலையைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

ஆறுமுகனேரியில் ரூ. 10 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

மது, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

