பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

கரூர் சம்பவத்தால் மன உளைச்சல்: தவெக கிளைச் செயலர் தற்கொலை!

செஞ்சி அருகே கரூா் சம்பவத்தால் மனஉளைச்சல் ஏற்பட்டு தவெக கிளைச் செயலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
ஐயப்பன்
Updated On :30 செப்டம்பர் 2025, 2:30 am

Syndication

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கரூா் சம்பவத்தால் மனஉளைச்சல் ஏற்பட்டு தவெக கிளைச் செயலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செஞ்சி வட்டம், மயிலம் தொகுதி, வல்லம் ஒன்றியம், விற்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன்(50). இவா் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைச் செயலராக இருந்து வந்தாா்.

விஜய் ரசிகா் மன்றம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்தக் கிராமத்தில் தீவிர விஜய் ரசிகராக இருந்து வந்தாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்

அந்தக் கடிதத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் சிறப்பாக பணிபுரிந்ததாகவும், முன்னாள் அமைச்சா் ஒருவரின் நெருக்கடியால் போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று கூறியுள்ளாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செஞ்சி போலீஸாா் ஐயப்பன் உடலைக் கைப்பற்றி கூராய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஐயப்பனுக்கு ஆனந்தி (45) என்ற மனைவியும், மகன் அசோக் (25) மகள் பவித்ரா (22) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனா்.