டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

News image
தற்கொலை
Updated On :15 பிப்ரவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சிறுமி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கண்டனூரில் வசித்து வருபவா் உமா. இவரது கணவா் கணேசன் அருகேயுள்ள கிராமத்தில் வசிக்கிறாா். இருவரும் கூலித் தொழிலாளா்கள். இந்தத் தம்பதியின் 13 வயது மகள் அருகே புதுவயலில் உள்ள பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

மேலும், இந்த சிறுமி தாய் உமாவுடன் வசித்தாா். இதனிடையே சிறுமி ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.