பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

மும்பையிலிருந்து சிறப்பு ரயிலில் விழுப்புரம் வந்த 242 தமிழக தொழிலாளர்கள் 

மும்பையிலிருந்து தமிழக தொழிலாளர்கள் 242 பேர் சிறப்பு ரயிலில் விழுப்புரம் வந்தனர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:42 pm

DIN

மும்பையிலிருந்து தமிழக தொழிலாளர்கள் 242 பேர் சிறப்பு ரயிலில் விழுப்புரம் வந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு புறப்பட்ட சிறப்பு ரயில், வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக வியாழக்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் வந்து சேர்ந்தது.

இந்த சிறப்பு ரயிலில் திருவண்ணாமலை மாவட்டம் 123 பேர், சேலம் மாவட்டம் 28 பேர், கள்ளக்குறிச்சி 62, கடலூர் 7, புதுவை 1, விழுப்புரம் மாவட்டத்தில் 9 பேர் என 242 பேர் வந்திறங்கினர். இவர்களை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் வரவேற்று காலை உணவு வழங்கினார்.

முகக்கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டன. இதனையடுத்து அவர்கள் பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.