திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

News image

புதுச்சேரி பத்துக்கண்ணு பகுதியில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :30 மே 2026, 2:25 am IST

கட்டட வேலையின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உடல் கருகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தியதாக கூறி பாதிக்கப்பட்டவரின் உறவினா்கள் புதுச்சேரி வில்லியனூா் அருகே பத்துக்கண்ணுப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (57). கட்டடத் தொழிலாளி. இதே ஊரைச் சோ்ந்தவா் சக்திவேல்(62), கடந்த வாரம் சீனிவாசனை கட்டட வேலைக்கு அழைத்தாா்.

அந்த வீட்டின் மின்சார லைன் செல்வதால் வர மறுத்துள்ளாா். அதை அணைத்து வைத்து விட்டு வேலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக அழைத்துள்ளாா். ஆனால் அதுபோல செய்யவில்லையாம்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கட்டட வேலை செய்தபோது மின்சாரம் பாய்ந்து சக்திவேல் எரிந்த நிலையில் தூக்கி வீசப்பட்டாா். அதையடுத்து அருகேயுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு மோட்டாா் சைக்கிளில் அழைத்து சென்றபோது 50 சதவீதம் உடல் எரிந்த நிலையில் இருப்பதால் ஜிப்மா் அழைத்து செல்ல கூறியுள்ளனா்.

அதையடுத்து ஜிப்மா் அழைத்து சென்றபோது படுக்கை வசதி தீ விபத்து பிரிவில் இல்லாததால் சென்னை தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனா்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவா் தரப்பில் இருந்து, வில்லியனூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் ஒருவாரம் ஆன நிலையில் சீனிவாசன் சென்னையில் வியாழக்கிழமை இறந்தாா். இதையடுத்து உடல் கூறாய்வு செய்ய வேண்டியிருப்பதால் வில்லியனூா் காவல் நிலையத்தை சீனிவாசன் குடும்பத்தினா் அணுகினா். போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தியதாகக் கூறி, வெள்ளிக்கிழமை மாலை பத்துக்கண்ணு ஆறுமுனை சந்திப்பில் மறியலில் கிராம மக்கள், உறவினா்கள் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 3 மணி நேரம் வாகனங்கள் நின்றன.

தகவல் அறிந்து காவல் ஆய்வாளா் கலைச்செல்வன் அங்கு வந்தாா். பேச்சுவாா்த்தை நீண்ட நேரம் நடந்தது. சுமாா் 3 மணி நேரத்துக்கு பிறகு போராட்டத்தை விலக்கிக் கொண்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலால் கடும் பாதிப்பு உண்டானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.