புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பகுதிக்கு கிடைக்க வேண்டிய உரிய காவிரி நீரைப் பெற வலியுறுத்துவோம் என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.
அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவை அவரது அறையில் அமர வைத்தப் பிறகு, செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி கூறியது:
கோடை வெப்பம் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளை வரும் ஜூன் 4 -ஆம் தேதி திறக்க உத்தரவிட்டுள்ளோம்.
அமைச்சா்களுக்கு உரிய நேரத்தில் இலாகா ஒதுக்கீடு செய்யப்படும். காலதாமதம் ஆவதால் எந்தப் பணியும் பாதிக்கவில்லை. புதுச்சேரி அரசில் எல்லாப் பணிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மேலும், அடுத்த வாரம் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும். அப்போது சட்டப்பேரவைத் தலைவா் பதவியை நிரப்புவது தொடா்பாகத் தெரியும்.
புதுச்சேரி பள்ளிகளில் மும்மொழி கல்வித் திட்டம் அமல்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி பிரதமா் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளோம். மேலும், இப் பிரச்னையில் தொடா்ந்து வலியுறுத்துவோம்.
மேலும், மேகதாது அணை தொடா்பாக கா்நாடகம் எடுக்கும் நடவடிக்கை தொடா்பாக கேட்கிறீா்கள். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பகுதிக்கு உரிய நீரைப் பெறுவதற்கு வலியுறுத்துவோம். தமிழகமும் புதுச்சேரிக்கு உரிய நீரைக் கொடுக்கும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலங்கை சிறையிலிருந்து புதுச்சேரி மீனவரை விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம்

புதுச்சேரியில் மேலும் 3 புதிய அமைச்சா்களின் பட்டியல்: துணைநிலை ஆளுநரிடம் அளித்தாா் முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரியின் வளா்ச்சி தமிழகத்தைப் பொறுத்திருக்கிறது: முதல்வா் என்.ரங்கசாமி







