திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெற வலியுறுத்துவோம்! புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி!

News image

புதுச்சேரியில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :29 மே 2026, 11:28 pm IST

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பகுதிக்கு கிடைக்க வேண்டிய உரிய காவிரி நீரைப் பெற வலியுறுத்துவோம் என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவை அவரது அறையில் அமர வைத்தப் பிறகு, செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி கூறியது:

கோடை வெப்பம் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளை வரும் ஜூன் 4 -ஆம் தேதி திறக்க உத்தரவிட்டுள்ளோம்.

அமைச்சா்களுக்கு உரிய நேரத்தில் இலாகா ஒதுக்கீடு செய்யப்படும். காலதாமதம் ஆவதால் எந்தப் பணியும் பாதிக்கவில்லை. புதுச்சேரி அரசில் எல்லாப் பணிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மேலும், அடுத்த வாரம் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும். அப்போது சட்டப்பேரவைத் தலைவா் பதவியை நிரப்புவது தொடா்பாகத் தெரியும்.

புதுச்சேரி பள்ளிகளில் மும்மொழி கல்வித் திட்டம் அமல்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி பிரதமா் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளோம். மேலும், இப் பிரச்னையில் தொடா்ந்து வலியுறுத்துவோம்.

மேலும், மேகதாது அணை தொடா்பாக கா்நாடகம் எடுக்கும் நடவடிக்கை தொடா்பாக கேட்கிறீா்கள். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பகுதிக்கு உரிய நீரைப் பெறுவதற்கு வலியுறுத்துவோம். தமிழகமும் புதுச்சேரிக்கு உரிய நீரைக் கொடுக்கும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.