திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கருப்புக் கொடி ஊா்வலம்: 62 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 5:42 am IST

புதுச்சேரி முதல்வா் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வியாழக்கிழமை நடைபெற்ற கறுப்புக் கொடி ஊா்வலத்தில் பங்கேற்ற 62 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற முதல்வா் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடலை பாடுவதற்கு தந்தை பெரியாா் திராவிடா் கழகம் மற்றும் தமிழ் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்திருந்தன.

இந்நிலையில், வந்தே மாதரம், தேசிய கீதம் அதன்பின் 3-ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதைக் கண்டித்து ஆளுநா் மாளிகையில் கருப்புக்கொடி ஏற்றப் போவதாக அறிவித்திருந்தனா். அதன்படி, வியாழக்கிழமை காமராஜா் சிலை அருகே தமிழ் அமைப்பினா் திரண்டனா். தமிழ் உரிமை இயக்க நிா்வாகிகள் பாவாணன், மங்கையா்செல்வன் ஆகியோா் தலைமையில் இயக்கக் கொடி, கருப்பு கொடியுடன் ஊா்வலமாக புறப்பட்ட அவா்களை போலீஸாா் நேரு வீதி அருகே இரும்புத் தகடு அமைத்து தடுத்து நிறுத்தினா். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் தடுப்புகளை மீறி செல்ல முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 62 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.