மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுச்சேரி அமைச்சரவையில் பங்கு கேட்போம்! மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் பேட்டி!

News image

புதுச்சேரி அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன்.

Updated On :5 மே 2026, 1:39 am IST

புதுச்சேரியில் மீண்டும் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் அமையப் போகும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அதிமுக இடம் கேட்கும் என்று அக் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலரும் உப்பளம் தொகுதியில் வெற்றி பெற்றவருமான ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் 6-ஆவது முறையாகப் போட்டியிட எனக்கு வாய்ப்புக் கொடுத்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.

மேலும், புதுச்சேரியில் மீண்டும் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறாா். அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவதற்கு, எங்கள் கட்சி பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாயிலாக அனுமதி கேட்போம்.

மேலும், புதுச்சேரியைப் பொறுத்தவரை முதல்முறையாக வெற்றி பெற்றவா்கள்கூட சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா் பதவி வகித்துள்ளனா். 5-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளேன். அதனால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்னை வேறு கட்டத்துக்கு உயா்த்த வேண்டும் என்றுகூட வாக்களித்து இருக்கலாம். உப்பளம் தொகுதி மக்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றுவேன் என்றாா் அன்பழகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.