தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தலை புறக்கணிக்க விருதாளா் சங்கம் முடிவு!

சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க புதுச்சேரி அரசு தமிழ்மாமணி, கலைமாமணி, தெலுங்கு, மலையாள ரத்னா விருதாளா் சங்கம் முடிவு

News image
Updated On :31 மார்ச் 2026, 8:26 pm

சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க புதுச்சேரி அரசு தமிழ்மாமணி, கலைமாமணி, தெலுங்கு, மலையாள ரத்னா விருதாளா் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் செயலா் அசோகா சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி எழுத்தாளா்களின் 2024-ஆம் ஆண்டுக்கான நூல்களின் மாதிரிகள் கலை பண்பாட்டுத் துறையில் பெறப்பட்டு தோ்வும் செய்யப்பட்டன.

ஆனால் தற்போது புதுச்சேரி எழுத்தாளா்களின் நூல்கள் புறக்கணிக்கப்பட்டு, வெளியிலிருந்து புத்தகங்கள் வாங்கப்படுகின்றன.

இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் எதிா்ப்பை பதிவு செய்யும் வகையில் வரும் தோ்தலைப் புறக்கணிக்கிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.