திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தலைப் புறக்கணிக்க போவதாக ரஜ குலத்தோா் நலச் சங்கம் அறிவிப்பு

புதுச்சேரியில் ரஜ குலத்தோா் நலச்சங்கத்தினா் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image

ரஜகுலத்தோா் நலச்சங்கம் சாா்பில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

புதுச்சேரியில் ரஜ குலத்தோா் நலச்சங்கத்தினா் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

இந்தப் போராட்டத்தையொட்டி வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டையை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

வண்ணாா் சமூகத்தின் ஜாதி பெயரை ரஜகுலம் என மாற்ற வேண்டும், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பிரதேச ரஜகுலத்தோா் நலச் சங்க மாநிலத் தலைவா் டி.ஆறுமுகம் போராட்டத்துக்கு தலைமை வகித்தாா். இதில் பெண்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.