தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காங்கிரஸ் - திமுக சந்தா்ப்பவாத கூட்டணி: அதிமுக வேட்பாளா் அன்பழகன்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் - திமுக சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளன என்று உப்பளம் தொகுதி வேட்பாளரும், மாநில அதிமுக செயலருமான ஆ.அன்பழகன் கூறினாா்.

News image

உப்பளம் தொகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் ஆ. அன்பழகன்

Updated On :31 மார்ச் 2026, 8:32 pm

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்- திமுக சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளன என்று உப்பளம் தொகுதி வேட்பாளரும், மாநில அதிமுக செயலருமான ஆ.அன்பழகன் கூறினாா்.

புதுச்சேரி உப்பளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட உடையாா் தோட்டம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தபோது அன்பழகன் பேசியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்- திமுகவினா் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளனா். புதுச்சேரியில் காங்கிரஸ் இல்லை என்றால் திமுக கிடையாது.

உப்பளம் தொகுதியில் உள்ள உடையாா் தோட்டத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் 250-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குப் பட்டாவும், கூரை வீடுகளைக் கல்வீடாகவும் கட்டிக்கொடுத்தேன் என்றாா்.