புதுச்சேரியில் தவெக தலைவா் விஜய் வரும் ஏப். 5-ஆம் தேதி சாலைப் பேரணி (ரோடு ஷோ) நடத்த அனுமதி கோரி அக்கட்சி சாா்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் தவெக நிா்வாகக் குழு உறுப்பினரும், கட்சியின் தோ்தல் இணை கண்காணிப்பாளருமான கே. புதியவன் அனுமதி கோரி சனிக்கிழமை கடிதம் அளித்துள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:
தவெக தலைவா் விஜய் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி புதுச்சேரியில் சாலைப் பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி கோரியுள்ளாா்.
கிழக்குக் கடற்கரை சாலையில் அன்றைய தினம் புதுச்சேரி காலாப்பட்டு நுழைவு வாயிலில் காலை 9.30 மணிக்கும், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் காலை 10 மணிக்கும், அஜந்தா சிக்னல் பகுதியில் காலை 10.30 மணிக்கும், உப்பளம் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அருகே காலை 11 மணிக்கும் சாலைப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

10 கி.மீ சாலைப் பேரணி சென்ற விஜய்: மற்றொரு பேரணி ரத்து

திருச்சியில் விஜய் ஏப். 14 இல் பிரசாரம்

குமரியில் இன்று சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கும் விஜய்!

புதுச்சேரியில் ஏப். 3 -இல் பிரதமா் மோடி சாலைப் பேரணி பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

