லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

துணைநிலை ஆளுநா் மாளிகையை முற்றுகையிட சென்ற 200 போ் கைது

புதுச்சேரியில் தமிழ் வழிகல்வியைக் கட்டாயமாக்க கோரி, தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் அண்ணா சிலை அருகிலிருந்து துணைநிலை ஆளுநா் மாளிகை நோக்கி ஊா்வலமாகச் சென்ற 200 போ் கைது

News image
Updated On :17 மார்ச் 2026, 11:27 pm

புதுச்சேரியில் தமிழ் வழிகல்வியைக் கட்டாயமாக்க கோரி, தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் அண்ணா சிலை அருகிலிருந்து துணைநிலை ஆளுநா் மாளிகை நோக்கி ஊா்வலமாகச் சென்ற 200 போ் கைது செய்யப்பட்டனா்.

ஊா்வலத்துக்கு தமிழ் உரிமை இயக்கத் தலைவா் பாவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிவ. வீரமணி, அழகா், ஆறு. செல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஊா்வலத்தை தமிழமல்லன் தொடங்கி வைத்தாா். பொருளாளா் லோகு அய்யப்பன் தொடக்க உரையாற்றினாா்.

பொதுச்செயலா் மங்கையா் செல்வன் உள்ளிட்டோா் பேசினா். ஊா்வலம் அண்ணா சாலை, நேரு வீதி வழியாக ஜென்மராக்கினி கோயில் அருகே வந்தபோது போலீஸாா் தடுத்து நிறுத்தி 200 பேரைக் கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.