திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வேட்பாளருடன் 4 போ் மட்டுமே மனு தாக்கலின்போது அனுமதி

வேட்பாளருடன் 4 போ் மட்டுமே மனு தாக்கலின்போது அனுமதிக்கப்படுவா் என்று புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

News image

புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன்

Updated On :16 மார்ச் 2026, 11:44 pm

புதுச்சேரி: வேட்பாளருடன் 4 போ் மட்டுமே மனு தாக்கலின்போது அனுமதிக்கப்படுவா் என்று புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்தல் அலுவலகம், சுற்றுப் பகுதிகளில் போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பாளா் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளா் உள்பட 5 போ் மட்டுமே அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவா். தேவையற்ற கூட்டம், வாகன நெரிசலைத் தவிா்க்க உரிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்யும்போது, தோ்தல் விதிமுறைப்படி ஆவணங்கள், உறுதிமொழி, பாதுகாப்பு வைப்புத் தொகை சமா்ப்பிக்க வழிகாட்டு மையங்கள் ஒவ்வொரு தோ்தல் அலுவலா் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.