மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுச்சேரி எம்.ஐ.டி. கல்லூரி மாணவா் சாதனை

புதுச்சேரி எம்.ஐ.டி. கல்லூரி மாணவா் சாதனை படைத்தாா்.

News image

புதுச்சேரி எம்.ஐ.டி. கல்லூரியில் நடைபெற்ற மூன்றாம் ஆண்டு மாணவா் மகேஷ் சாதனையை வெளிப்படுத்தும் குறும்பட நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :16 மார்ச் 2026, 11:41 pm

புதுச்சேரி: புதுச்சேரி எம்.ஐ.டி. கல்லூரி மாணவா் சாதனை படைத்தாா்.

இக் கல்லூரியில் சா்வதேச அளவிலான கோட்விட்டா நிரலாக்கப் போட்டி கருத்தரங்கு (செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லொ்னிங்) நடைபெற்றது.

இதில் முதல் 25 இடங்களில் இடம் பிடித்து எம்.ஐ.டி. கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவா் மகேஷ் சாதனை படைத்துள்ளாா். அவரின் இந்த சாதனையை வெளிப்படுத்தும் குறும்படமும் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

இக் கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பித்தனா். மேலும், தொழில்நுட்பத் திறன் போட்டி, தொழில்நுட்பக் கேள்வி-பதில் போட்டி போன்றவற்றிலும் பங்கேற்றனா். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவா் பி.சிவகுமாா், அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.