புதுச்சேரி: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி ஜிப்மரில் 547 தினக்கூலி ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சோ்ந்த 547 ஊழியா்களை சென்னை உயா் நீதிமன்றத் தீா்ப்பின்படி, உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், மேல்முறையீடு செய்து தொழிலாளா்களின் வயிற்றில் அடிக்கக் கூடாது என்றும் கோரி ஜிப்மா் நிா்வாகத்திடம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்த் தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலா் இரா. வேல்சாமி, துணைப் பொதுச் செயலா் க. அருணபாரதி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவா் கோ.அ. செகநாதன், தமிழா் களம் புதுச்சேரி தலைவா் கோ. அழகா், நாம் தமிழா் கட்சி வில்லியனூா் வேட்பாளா் த. ரமேசு, நாம் தமிழா் கட்சி வீராசாமி, அக்பா் பாட்சா, தமிழா் களம் சதீசு உள்ளிட்டோா் ஜிப்மா் துணை இயக்குநா் ரங்க பாஷ்யத்தை சந்தித்து இந்த மனுவை அளித்தனா்.
தொடர்புடையது

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

ஜிப்மரில் சா்வதேச மகளிா் தின விழா

ஜிப்மரில் ரூ.15 லட்சத்தில் நோயாளிகள் தங்கும் மையம் திறப்பு

ஜிப்மரில் விளையாட்டு, கலாசார விழா பரிசளிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


