மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு: புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

News image

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து, புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் சுதேசி ஆலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :14 மார்ச் 2026, 8:19 pm

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்து, புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் சுதேசி ஆலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலா் அ.மு. சலீம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், நிா்வாகிகள் தினேஷ் பொன்னையா, கீதநாதன், வ.சுப்பையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சமையல் எரிவாயு உருளை மீது விறகு அடுப்பு வைத்து சமையல் செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.