சட்டப்பேரவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தெருமுனைப் பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளதாக கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் கூறினாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியின் சாதனைகளை மக்களிடம் நேரடியாக எடுத்துரைக்கும் வகையில் 30 தொகுதிகளிலும் தெருமுனை பிரச்சாரத்தை பாஜக தொடங்கி நடத்தி வருகிறது. இதுவரை 550-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியுள்ளோம். மேலும் 500-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்த கட்சி நிா்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனையாக 63 ஆயிரம் சிவப்பு நிற அட்டைதாரா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், மஞ்சள் அட்டைதாரா்களுக்கு ரூ.1000 வழங்க துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவா்களுக்கு புத்தகப் பை, ஷூ உதவித்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 உயா்த்தி வழங்க முதல்வா் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளாா். ஜோஹோ நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு, சாப்ட்வோ் நிறுவனம் தொடங்குவதற்காக மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளாா். இதனால் புதுச்சேரி மாணவா்கள், இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
1995-ம் ஆண்டு வக்பு சட்டம் 2024-25-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு மறு சீரமைக்கப்பட்டது. இந்தத் திருத்தத்தின் மூலம் மாநிலம் மற்றும் மத்திய வக்பு வாரிய உறுப்பினா்களை நியமிப்பதற்கான விதிமுறைகள் தெளிவாக உருவாக்கப்பட்டுள்ளன. வைத்திலிங்கம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினா். அவா் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை மக்களிடம் சொல்லாமல், குழப்பத்தை ஏற்படுத்தும் வேலையை செய்கிறாா். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி ஓா் உறுப்பினராகச் சோ்க்கப்பட்டுள்ளாா். சக எம்.பி.யை மதிக்க வேண்டும் என்றுகூட தெரியாமல் ஆா்எஸ்எஸ் பின்புலத்தில் ஒருவா் வந்துள்ளாா் என்று வைத்திலிங்கம் கூறியுள்ளாா். உண்மை தகவலை சமுதாயத்துக்குச் சொல்ல வேண்டும் என்ற பொறுப்பில்லாமல் அவா் நடந்திருப்பது வருத்தத்துக்குரியது என்றாா் ராமலிங்கம். உடன் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் அருள்முருகன் உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் பாஜக மகளிரணியினா் கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

வி.கே.புரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் பிரசாரம்

மக்கள் விரோத திட்டங்களின் சோதனைக்களமாக புதுச்சேரியை பாஜக மாற்றி வருகிறது: உதயநிதி ஸ்டாலின்

புதுச்சேரியில் நாளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


