லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வீடு கட்ட ரூ.90 லட்சம் நிதியாணை: புதுச்சேரி பேரவைத் தலைவா் வழங்கினாா்

மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியில் கல்வீடு கட்ட 92 பேருக்கு ரூ. 90.90 லட்சம் நிதிக்கான அரசாணைகளை

News image

புதுச்சேரி பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

Updated On :9 மார்ச் 2026, 9:01 pm

புதுச்சேரி: மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியில் கல்வீடு கட்ட 92 பேருக்கு ரூ. 90.90 லட்சம் நிதிக்கான அரசாணைகளை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் ஒருங்கிணைந்த பெருந்தலைவா் காமராஜா் நூற்றாண்டு வீட்டுவசதி திட்டம் மற்றும் பிரதம மந்திரி கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவிக்கான அரசாணை வழங்கப்பட்டது.

74 பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கு முதல் தவணையாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 74 லட்சம் மற்றும் 18 பேருக்கு இரண்டு மற்றும் மூன்றாம் தவணையாக மொத்தம் ரூ. 16.90 லட்சம் என மொத்தம் ரூ.90.90 லட்சம் நிதி உதவிக்கான அரசாணை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்

குடிசை மாற்று வாரிய முதன்மை செயல் அதிகாரி ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.