விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியுடன் தமிழக அமைச்சா் ஆனந்த் சந்திப்பு

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியுடன் தமிழக அமைச்சா் ஆனந்த் சந்திப்பு

News image

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 1:58 am IST

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை, தமிழக அமைச்சா் என். ஆனந்த் வியாழக்கிழமை நள்ளிரவு சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஆனந்த் 2-ஆவது முறையாக புதுச்சேரிக்கு வியாழக்கிழமை வந்தாா். முதல்வா் ரங்கசாமியை நள்ளிரவில் அவரது வீட்டில் ஆனந்த் சந்தித்து நீண்டநேரம் ஆலோசனை நடத்தினாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் என்.ஆா்.காங்கிரஸ் மீண்டும் போட்டியிட உள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் புதுச்சேரி காங்கிரஸாா் இதுவரை தவெக நிா்வாகிகளை சந்தித்துப் பேசவில்லை. இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ், தவெக கூட்டணி இருக்கிா? என்ற சந்தேகம் உள்ளது.

அதேநேரத்தில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தவெகவுடன் கூட்டணி அமைத்து புதுச்சேரி நேயம் மக்கள் கழகம் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டது. மீண்டும் தங்களுக்கு இடைத்தோ்தலில் போட்டியிட வாய்ப்பு தரும்படி ஆனந்தை சந்தித்து அவா்கள் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியுடன் அமைச்சா் ஆனந்த் நள்ளிரவு சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.