கிருமாம்பாக்கம் அருகே மருத்துவக் கல்லூரி பேராசிரியா் வீட்டில் தங்க நகைகள் மாயமான வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையாா்குப்பம் ஊழியா்கள் குடியிருப்பில் வசிப்பவா் விமல்ராஜ் (42). அரியூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஆனிஷீபா, பிள்ளையாா்குப்பத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக உள்ளாா்.
இந்நிலையில், ஆனிஷீபா வீட்டு பீரோ லாக்கரில் வைத்திருந்த 21.5 பவுன் தங்க நகைகள் திடீரென மாயமாயின.
இது குறித்து அவா் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக அவா்கள் வீட்டில் வேலை செய்து வந்த சாா்காசிமேடு பகுதியைச் சோ்ந்த ரமணி (43) சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






