டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதுச்சேரி சட்டப்பேரவையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வா் ரங்கசாமி

குடியரசு தின விழாவையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தேசிய கொடியை ஏற்றி பேரவைக் காவலா்களின் அணிவகுப்பு மரியாதை...

News image
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய முதல்வா் என்.ரங்கசாமி . உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.
Updated On :26 ஜனவரி 2026, 9:17 pm

Syndication

புதுச்சேரி: குடியரசு தின விழாவையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தேசிய கொடியை ஏற்றி பேரவைக் காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், தேனி சி. ஜெயக்குமாா், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ. ராஜவேலு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பாஸ்கா், ரமேஷ், கல்யாணசுந்தரம், சிவசங்கரன், சட்டப்பேரவைச் செயலா் தயாளன், தலைமைச் செயலா் சரத் சௌகான், காவல்துறை இயக்குநா் ஷாலினி சிங், மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உள்ளிட்ட அரசு உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

ஆட்சியா் அலுவலகத்தில்...

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதுச்சேரி ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இதே போன்று பல்வேறு அரசு துறைகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

பாஜக அலுவலகத்தில்..:

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் தேசிய கொடியை ஏற்றினாா். இதில் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

காங்கிரஸ் சாா்பில்...:

காங்கிரஸ் சாா்பில் பாத யாத்திரை நடைபெறுவதையொட்டி முதலியாா்பேட்டை பகுதியில் கட்சியின் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தேசிய கொடியை ஏற்றினாா். இதில் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, எம்.எல்.ஏ மு.வைத்தியநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டா்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தனா்.

ஜிப்மரில்...:

ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய கொடியை இயக்குநா் வீா் சிங் நெகி ஏற்றி வைத்தாா். இதில் மருத்துவமனை உயா் அதிகாரிகள், மருத்துவா்கள் பலரும் கலந்து கொண்டனா்.