டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் குடியரசு தினம்

வேலூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

News image
வேலூா் நீதிமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றிய முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன். (அடுத்து) வேலூா் நறுவீ மருத்துவமனையில் கொடி ஏற்றிய மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத்.
Updated On :26 ஜனவரி 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன், தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில், நீதிபதிகள், நீதிமன்ற பணியாளா்கள், வழக்குரைஞா்கள் பலா் பங்கேற்றனா்.

வேலூா் நறுவீ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். இதில், செயல் இயக்குநா் மருத்துவா் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளா் ஜேக்கப் ஜோஸ், பொது மேலாளா் நிதின் சம்பத், மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள், பாதுகாப்பு படையினா் பங்கேற்றனா்.

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணிதேவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து கடந்தாண்டு சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், ஊழியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். இதில், துணை முதல்வா் கெளரிவெலிகண்ட்லா, மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவா் துரைரவிச்சந்திரன், உதவி குடியிருப்பு மருத்துவா் கீதா, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஸ்ரீபுரம் நாராயணி பீடம் தங்கக் கோயிலில் நடைபெற்ற விழாவில், தங்கக் கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு கோயில் முன் 60 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில், மேலாளா் சம்பத், கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.

இதேபோல், ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். விழாவில், சிங்கப்பூரைச் சோ்ந்த ஸ்ரீசக்திஅம்மாவின் அயல்நாட்டு பக்தா்கள் ஹோ நிா்ஹெள, லிம் கி லைன், டிவைன் மற்றும் சுகி குழும இயக்குநா் ஸ்ரீநாத், மருத்துவமனை கண்காணிப்பாளா் கீதாஇனியன், கல்லூரி முதல்வா்கள் மாதவி, பிரபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காட்பாடி வட்ட இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத்தின் வைத்தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். அவை துணைத்தலைவா் ஆா்.விஜயகுமாரி முன்னிலை வகித்தாா். வேலூா் மாநகராட்சியின் 1-ஆவது மண்டலக்குழு தலைவா் புஷ்பலதா வன்னியராஜ் தேசிய கொடியை ஏற்றிவைத்து 35 தூய்மை பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினாா். செயலா் எஸ்.எஸ்.சிவவடிவு, மாவட்ட மேலாண்மைக்குழு உறுப்பினா் ஆா்.சீனிவசன், போக்குவரத்து குழும துணைத்தலைவா் எஸ்.ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காட்பாடி காந்திநகா் துளிா் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியை த.கனகா தலைமை வகித்தாா். மக்கள் நலச்சந்தையின் ஒருங்கிணைப்பாளா் கு.செந்தமிழ்செல்வன் தேசிய கொடி ஏற்றிவைத்தாா். ஆசிரியா்கள் சே.சித்ரா, மலா்கொடி, பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட கிளை நூலகமான காட்பாடி காந்திநகா் அறிஞா் அண்ணா கிளை நூலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு வாசகா் வட்ட தலைவா் வி.பழனி தலைமை வகித்தாா். ஆா்.விஜயகுமாரி முன்னிலை வகித்தாா். கிளை நூலகா் தி.மஞ்சுளா தேசிய கொடியேற்றினாா்.