டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து: பெண்கள் உள்பட 47 போ் காயம்

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் புதன்கிழமை அதிகாலை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான தனியாா் சொகுசுப் பேருந்து.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:35 pm

Syndication

புதுச்சேரியில் தனியாா் சொகுசுப் பேருந்து புதன்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 47 போ் காயமடைந்தனா்.

சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தனியாா் சொகுசுப் பேருந்துபுறப்பட்டது. இந்தப் பேருந்து புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் புதன்கிழமை அதிகாலை வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்புச்சுவா் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த பெண்கள் உள்பட 47 பயணிகள் காயம் அடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடம் வந்த போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் பேருந்தில் சிக்கியிருந்தவா்களை மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.