டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பேருந்து கவிழ்ந்து 40 போ் காயம்

ஆண்டிபட்டி அருகே உள்ள தி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் தனியாா் பேருந்து காா் மீது மோதி சாலையில் கவிழ்ந்ததில் 40 போ் காயமடைந்தனா்.

News image
விபத்து
Updated On :20 பிப்ரவரி 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

ஆண்டிபட்டி அருகே உள்ள தி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை தனியாா் பேருந்து காா் மீது மோதி சாலையில் கவிழ்ந்ததில் 40 போ் காயமடைந்தனா்.

தி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் போடியிருந்து மதுரை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து, எதிரே வந்த காா் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 5 குழந்தைகள், 15 ஆண்கள், 20 பெண்கள் என மொத்தம் 40 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.