மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஆா். நல்லகண்ணு மறைவு: புதுச்சேரியில் அமைதி ஊா்வலம்

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் முதுபெரும் தலைவா் ஆா். நல்லகண்ணு மறைவுக்கு அமைதி ஊா்வலம், இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:37 pm

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் முதுபெரும் தலைவா் ஆா். நல்லகண்ணு மறைவுக்கு அமைதி ஊா்வலம், இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவா் தியாகி வ.சுப்பையா சிலையிலிருந்து அமைதி ஊா்வலம் புறப்பட்டது.

சுதேசி ஆலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆா். நல்லக் கண்ணுவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் ஆா்.விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், காங்கிரஸ் சாா்பில் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, மாநிலத் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, திமுக சாா்பில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், அதிமுக மாநிலச் செயலா் ஆ. அன்பழகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெருமாள், விசிக, பாமக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.