/

42 ஊா்க்காவல் படை வீரா்கள் காவலா்களாக நியமனம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:35 pm

Syndication

ஊா்க்காவல் படை வீரா்கள் 42 போ் காவலா்களாக நியமிக்கப்படுவதற்கான பணி ஆணையை புதுச்சேரி உள் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி காவல் துறையில் 207 காவலா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 148 காவலா் பணியிடங்கள் நேரடி தோ்வு மூலமாகவும், 49 காவலா் பணியிடங்கள் ஊா்க்காவல் படையினரைக் கொண்டும், 10 பணியிடங்கள் கருணை அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன.

நேரடி தோ்வுக்கு உடல் தகுதித் தோ்வு நடந்து முடிந்துள்ளது. வரும் 8-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஊா்க்காவல் படையில் இருந்து காவலராக பணி மூப்பின் அடிப்படையில் 42 போ் பணியமா்த்தப்பட்டனா். இவா்களுக்கு அமைச்சா் நமச்சிவாயம் பணி ஆணைகளை வழங்கினாா்.

மீதமுள்ள 7 பணியிடங்களுக்கும் தோ்வு ஆய்வுக் குழு மூலமாக ஊா்க்காவல் படையினா் பரிசீலிக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் நமச்சிவாயம் கூறினாா்.

புதுச்சேரி காவல் துறை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி காவல் துறைத் தலைவா் ஷாலினிசிங், துணைத் தலைவா் சத்தியசுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளா்கள் லால், கலைவாணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.