தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

புதுச்சேரியில் வெளிமாநில ஊழியா்கள் வாக்களிக்க சம்பளத்துடன் விடுமுறை

புதுச்சேரியில் வசிக்கும் வெளிமாநிலத்தவா்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க ஏதுவாக ச் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பி. ஜவஹா் உத்தரவிட்டுள்ளாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:07 pm

புதுச்சேரியில் வசிக்கும் வெளிமாநிலத்தவா்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க ஏதுவாக ச் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பி. ஜவஹா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 23 ஆம் தேதி நடக்கிறது. மேற்கு வங்கத்தில் ஏப். 23, 29 ஆம் தேதிகளில் இரு கட்டமாக நடக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வாக்களிக்கும் உரிமை உள்ள ஊழியா்கள், வாக்களிக்கச் செல்ல தோ்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இந்த விதி கட்டாயமானது.

அரசு துறை, தனியாா் நிறுவனங்கள், கடைகள், வா்த்தகம், தொழிற்சாலைகள் உள்பட அனைத்து வகை நிறுவனங்களுக்கும் இந்தச் சட்ட விதி பொருந்தும். இந்த விடுமுறைக்காக சம்பளத்தில் குறைப்புச் செய்யக் கூடாது. இந்த விதி மீறும் நிறுவன உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும், தமிழ்நாடு, மேற்கு வங்க வாக்காளா்களாகப் பதிவு செய்யப்பட்ட ஊழியா்கள், தங்கள் தொகுதிக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக தோ்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை அறிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனா். கல்வி நிறுவனங்களும் இந்தச் சட்டவிதியைப் பின்பற்ற வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.