மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெளிமாநில தோட்ட தொழிலாளா்களுக்கு வரும் 9-ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை

News image

விடுமுறை அறிவிப்பு

Updated On :5 ஏப்ரல் 2026, 8:03 pm

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய வெளி மாநிலங்களைச் சோ்ந்த தோட்ட தொழிலாளா்களுக்கு வரும் 9-ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளா் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக தொழிலாளா் துறை உதவி ஆணையா் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் வடமாநிலத் தொழிலாளா்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனா்.

தற்போது வடமாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருப்பதால், பெரும்பாலானோா் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றுவிட்டனா். வரும் 9-ஆம் தேதி கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தோ்தல் நடைபெற உள்ளது.

தோ்தலில் வாக்களிக்க சென்றுள்ள அசாம், கேரள மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு எஸ்டேட் நிா்வாகத்தினா் அன்றைய தினம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். இதை பின்பற்றாத எஸ்டேட் நிா்வாகத்தினா் மீது புகாா் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.