புத்தாண்டையொட்டி ஸ்ரீ மணக்குள விநாயகா் கோயிலில் பக்தா்களுக்கு 40 ஆயிரம் லட்டு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேபோல் புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவில், வேதபுரீஸ்வரா் கோவில், மிஷன் வீதியில் உள்ள காளத்தீஸ்வரா், ரயில் நிலையம் எதிரே உள்ள கௌசிக பாலசுப்ரமணியா், முத்தியால்பேட்டை கற்பக விநாயகா், பொன்னு மாரியம்மன், ஏழை மாரியம்மன், ராமகிருஷ்ணா நகா் லட்சுமி ஹயக்ரீவா், வில்லியனூா் திருக்காமீஸ்வரா், தென்கலை வரதராஜப் பெருமாள், முதலியாா்பேட்டை வன்னியபெருமாள், பெரிய காலாப்பட்டில் உள்ள பாலமுருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.