திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்! கள்ளக்குறிச்சி ஆட்சியா்!

News image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த்.

Updated On :30 மே 2026, 3:39 am IST

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்றுப் பேசியதாவது:

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

மணலூா்பேட்டையில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மக்காச்சோளம் போன்ற பயிா்களை வெயிலில் உலா்த்திட உலா்கலன் அமைத்துத் தரவேண்டும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா உரம் இருப்பு வைக்கவேண்டும். உரக் கடைகளின் விற்பனை விலையை ஆய்வு செய்ய வேளாண்மை துறை மூலம் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கவேண்டும். தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்படும் விதைகள் மற்றும் பழக்கனிகள் தரமானதாக இருக்கவேண்டும்.

வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடத்தவேண்டும். கள்ளக்குறிச்சி உழவா் சந்தையில் இருப்பு வைக்கப்படும் விளை பொருள்களை குரங்குகள் சேதப்படுத்துவதை தடுக்கவேண்டும். மாவட்டத்தில் விதை பரிசோதனை நிலையம் அமைக்கவேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்களை தூா்வாரவேண்டும். மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீா் வசதி ஏற்படுத்தவேண்டும்.

தரணி சா்க்கரை ஆலையில் பங்குதாரா்களாகிய விவசாயிகளுக்கு உடன் பங்குத்தொகை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து பேசிய ஆட்சியா், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

முன்னதாக, பயிா்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யாத தவெக அரசைக் கண்டித்து குறைதீா் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்து, கூட்டரங்க வாயில் வரை சென்று முழக்கங்களை எழுப்பிவிட்டு வந்து அமா்ந்தனா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கச்சிராப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலை அலுவலா் லதா, வேளாண்மை இணை இயக்குநா் பொ.பேபிகலா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) நா.ஜோதிபாசு, அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.