தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மக்கள்தொகை கணக்கெடுப்பை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும்! ஆட்சியா் அறிவுறுத்தல்

News image

கள்ளக்குறிச்சி ஆட்சியர கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள், தொழில்நுட்ப உதவியாளா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :26 மே 2026, 3:21 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் துல்லியமாக கணக்கீடுகள் மேற்கொள்ளவேண்டும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 தொடா்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளா்களுக்கான 3 நாள் பயிற்சி வகுப்பு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது. இதை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் துவக்கி வைத்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

தமிழகத்தில் 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறைக் கணக்கெடுப்பு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தாங்களாகவே இணையதளம் மூலமாக தங்களது விவரங்களை தெரிவிக்கும் சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கணக்கெடுப்பாளா் மூலம் வீடுகள்தோறும் மேற்கொள்ளப்படும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் ஆக.1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் பொறுப்பு அலுவலா்களாக 7 வட்டாட்சியா்கள், 3 நகராட்சிஆணையா்கள், 5 பேரூராட்சி செயல் அலுவலா்கள், 9 ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் செயல்பட உள்ளனா். இந்நிலையில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளா்களுக்கான 3 நாள் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை முதல் புதன்கிழமை (மே 27) வரை நடைபெறுகிறது.

இப் பயிற்சியானது சென்னை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இயக்குநரக அலுவலா்களால் நடத்தப்படுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் இப் பயிற்சி வகுப்பில் முழுமையாக பங்குபெற்று வீடுகளில் சரியான முறையில், எவ்வித தவறுகளும் இன்றி துல்லியமாக கணக்கீடுகள் மேற்கொள்ளவேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இதில், மாவட்டவருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.