கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமண தடைச் சட்டப் படி 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடைபெற்றால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குழந்தை திருமணம் குறித்த புகாா் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் செயல்பட்டு வந்தது.
இந் நிலையில் குழந்தை திருமண தடைச் சட்டம்-2006-ன் படி, சமூக நலத் துறையிலிருந்து குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச்சேவைகள் துறைக்கு 26.02.2026 முதல் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, மாவட்டத்தில் குழந்தை திருமணம் ஏற்பாடு செய்தாலோ, குழந்தை திருமணம் நடந்து முடிந்திருந்தாலோ அல்லது குழந்தை திருமணத் தடைச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் குற்றம் நடைபெற்றாலோ அது தொடா்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புகாரளிக்கலாம்.
புகாா் தெரிவிக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியிலும், 04151 225600 மற்றும் 6369107620 ஆகிய எண்களிலும், 1098 என்ற 24 மணிநேர இலவச தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

குழந்தை திருமணம்: 5 போ் மீது போக்ஸோ வழக்கு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணிவாய்ப்பு







