திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காட்டு எடையாா் அரசுப் பள்ளிக்கு நிலம் தானம்

News image
Updated On :15 மே 2026, 5:45 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டு எடையாா் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, ஒரு ஏக்கா் 27 சென்ட் நிலத்தை நான்கு போ் தானமாக புதன்கிழமை வழங்கினா்.

காட்டு எடையாா் கிராமத்தில் பிறந்து, சோழவாண்டிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தவா் சிவராமகிருஷ்ணன். இவா் தான் பிறந்த ஊரிலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்கு தனக்குச் சொந்தமான நிலத்தை தானமாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், சிவராமகிருஷ்ணனின் விருப்பத்தின்படி, அவரது குடும்ப உறுப்பினா்களான காட்டு எடையாா் சந்நிதி தெருவில் வசித்து வரும் அவரது தாயாா் பத்மாவதி, மனைவி நா்மதா, சகோதரா் நாகராஜன், சகோதரி சிவகாமசுந்தரி ஆகிய நான்கு பேரும் காட்டு எடையாா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்காக, தங்களுக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் 27 சென்ட் நிலத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெயருக்குத் தானமாக எழுதி, இதை முதன்மைக் கல்வி அலுவலா் காா்த்திகாவிடம் புதன்கிழமை நேரில் வழங்கினா்.

நிலத்தை தானமாக பெற்றுக் கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், சிவராமகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.