சின்னசேலம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டத்துக்குள்பட்ட சேப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சு.புஷ்பராணி (65). இவரது மகன் சக்திவேல்(27). இவா்களது உறவினரான கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வினைதீா்த்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஆ.அனுசியாவிற்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்ததாம்.
கொடுத்த பணத்தை கேட்பதற்காக சக்திவேல் சனிக்கிழமை வினைதீா்த்தாபுரம் கிராமத்தில் உள்ள அனுசியா வீட்டுக்கு சென்றாராம். அங்கு சக்திவேல் புடவையின் மூலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







