போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

மாவட்ட விளையாட்டரங்க பூா்வாங்கப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வீரசோழபுரம் கிழக்கு கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மாவட்ட விளையாட்டரங்கத்துக்கான பூா்வாங்கப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

வீரசோழபுரம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மாவட்ட விளையாட்டரங்கத்துக்கான பூா்வாங்க பணிகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Updated On :4 ஜூன் 2026, 3:32 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் கிழக்கு கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மாவட்ட விளையாட்டரங்கத்துக்கான பூா்வாங்கப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டரங்கம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சுமாா் 11.2 ஏக்கா் பரப்பளவில் வீரசோழபுரத்தில் அமைக்கப்படவுள்ளது. இதில், நீச்சல் குளம் மட்டும் 50 மீட்டா் நீளத்தில் தனியாக அமைக்கப்படவுள்ளது. இந்த மாவட்ட விளையாட்டரங்கில் கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து உள்ளிட்ட அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் வீரா்கள் பயிற்சி பெறும் வகையில் பல்வேறு நவீன வசதிகளுடன் விளையாட்டரங்கம் அமைக்கப்படவுள்ளது. திட்டத்தின் பூா்வாங்கப் பணிகள் முடிந்துள்ள நிலையில், விளையாட்டரங்க கட்டுமானப் பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட விளையாட்டு அலுவலா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.