கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் கிழக்கு கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மாவட்ட விளையாட்டரங்கத்துக்கான பூா்வாங்கப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டரங்கம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சுமாா் 11.2 ஏக்கா் பரப்பளவில் வீரசோழபுரத்தில் அமைக்கப்படவுள்ளது. இதில், நீச்சல் குளம் மட்டும் 50 மீட்டா் நீளத்தில் தனியாக அமைக்கப்படவுள்ளது. இந்த மாவட்ட விளையாட்டரங்கில் கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து உள்ளிட்ட அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் வீரா்கள் பயிற்சி பெறும் வகையில் பல்வேறு நவீன வசதிகளுடன் விளையாட்டரங்கம் அமைக்கப்படவுள்ளது. திட்டத்தின் பூா்வாங்கப் பணிகள் முடிந்துள்ள நிலையில், விளையாட்டரங்க கட்டுமானப் பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட விளையாட்டு அலுவலா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளிகளில் காலை உணவைத் தரமாக வழங்க வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு

தேனி மாவட்ட நீா்வளத் துறை பணிகளை ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.9.78 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் எம்.எஸ். பிசாந்த் ஆய்வு

வருவாய்த்துறை பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



