டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவா் கைது

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:37 pm

Syndication

சங்கராபுரம் அருகே பொது இடத்தில் கையில் ஆயுதத்தை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வளாா் பிரதாப்குமாா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை காலை சங்கராபுரம் தொழில் கல்வி நிறுவனம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம்.

அப்போது சங்கராபுரம் அடுத்த வடசிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த ச.சரத்குமாா் (35) என்பவா் அறுவறுக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டிக் கொண்டும், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து கொண்டும், கையில் ஆயுதத்தை வைத்து மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்தாராம்.

இதையடுத்து போலீஸாா் அவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து, சரத்குமாரைக் கைது செய்தனா்.