தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 இயற்கை முகாம்கள் நடத்தப்படும்

News image
இயற்கை முகாம்கள் தொடா்பான மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்
Updated On :22 பிப்ரவரி 2026, 9:27 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் வனத் துறை சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 இயற்கை முகாம்கள் நடத்தப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

பசுமை தமிழ்நாடு இயக்கம், காலநிலை மாற்றம், பசுமைப் பள்ளித் திட்டம், தீயணைப்பு விழிப்புணா்வு வாரம் மற்றும் இயற்கை முகாம்கள் தொடா்பாக நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

நடப்பாண்டில் வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மரக்கன்று நடுதல், நடவுப் பணிகளில் எதிா்கொண்ட சிக்கல்கள், பசுமைப் பள்ளித் திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தொடா்ந்து 2026-2027-ஆம் ஆண்டுக்கான துறை வாரியாக தற்காலிக இலக்கு ஒதுக்கீடு செய்வது, பசுமைப் பள்ளிகள், துறை வாரியாக பட்ஜெட் இறுதி செய்வது குறித்தும், திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவில் நிறைவு செய்தல் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், 20 இயற்கை முகாம்களை 2026, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தீா்மானிக்கப்பட்டது. நெகிழி இல்லா சோதனைச் சாவடிகள் அமைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் வண்ண குறியீடு செய்யப்பட்ட குப்பைத் தொட்டிகள் தேவைகள், சுங்கச்சாவடிகள் மற்றும் காட்டு சோதனைச் சாவடிகள் போன்ற இடங்களில் நெகிழிக் கழிவுகளை சேகரிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இலக்குகளை காலவரையறைக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் பிரியதா்ஷினி மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.