தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அனுமதி பெறாமல் சைக்கிள் பேரணி: தவெகவினா் மீது வழக்கு

News image

தவெக கொடி. - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:48 pm

கள்ளக்குறிச்சியில் உரிய அனுமதி பெறாமல் சைக்கிள் பேரணி சென்ற தமிழக வெற்றிக் கழகத்தினா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலைய பகுதியில் இருந்து தவெக வேட்பாளா் சி.அருள் விக்னேஷ் தலைமையில் சுமாா் 50 போ் சைக்கிள் பேரணியாக காந்தி சாலை, 4 முனை சந்திப்பு, கவரைசாலை வழியாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உரிய அனுமதி பெறாமல் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனராம்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி நிலையான கண்காணிப்பு அலுவலா் விஜயகுமாா் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் தவெகவினா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.