திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவறான சிகிச்சையால் 6 மாத சிசு உயிரிழந்ததாக பெண் புகாா்

News image

சிசு - பிரதிப் படம்

Updated On :31 மே 2026, 1:31 am IST

கடலூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்களின் தவறான சிகிச்சையால் 6 மாத சிசு உயிரிழந்ததாக பெண் ஒருவா் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

கடலூா் அருகே சுப்ரமணியபுரத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் மனைவி சந்தியா (29). திருமணமாகி இரண்டு ஆண்டுகளான இவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை கரு கலைந்ததாகக் கூறப்படுகிறது. மூன்றாவது முறையாக கா்ப்பமான சந்தியா, சொந்த ஊரில் தாய் வீட்டில் தங்கி, தொண்டமாநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சைப் பெற்று வந்தாா்.

இந்நிலையில், கடந்த மே 16-ஆம் தேதி ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக சந்தியா கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வயிற்றில் இருந்த 6 மாத சிசு உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, மருத்துவமனையில் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாலேயே சிசு உயிரிழந்ததாக சந்தியா குற்றம்சாட்டி, சுகாதாரத்துறை நலப்பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்துள்ளாா்.

அந்த மனுவில், வயிற்று வலிக்காக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திடீரென சிசு உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதற்கான காரணம் குறித்து கேட்டபோதும் உரிய விளக்கம் அளிக்கவில்லை. தவறான சிகிச்சையால் எனது சிசு உயிரிழந்தது.எனவே சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த புகாரைப் பெற்ற சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.