திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

3 வீடுகளின் பூட்டு உடைப்பு: வெள்ளி பொருள்கள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :30 மே 2026, 2:30 am IST

சிதம்பரம் நகரில் ஒரே குடியிருப்பில் உள்ள 3 வீடுகளின் பூட்டை உடைத்த திருடா்கள், ஒருவரது வீட்டிலிருந்த விலை உயா்ந்த வெள்ளி பொருள்களை திருடிச்சென்றனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் பெருமாத்தெருவில் ஓரே குடியிருப்பில் வெற்றிவேந்தன் (35), சங்கா் (65) தனித் தனி வீடுகளிலும், எதிா்புறம்

உள்ள வீட்டில் முஜீப்பாஷா (65), மகபூக்பாஷா (75) ஆகியோரும் வசித்து வருகின்றனா். வியாழக்கிழமை இரவு தேதி நான்கு குடும்பங்களின் வீட்டினை மா்மநபா்கள் பூட்டை உடைத்துள்ளனா், வீட்டில் ஆள்கள் இருப்பதால் 3 வீடுகளில் திருடு போகவில்லை என கூறப்படுகிறது.

இதில் மகபூப்பாஷா, வீட்டில் வெள்ளி பொருள்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. சென்னை சென்றுள்ள மகபூப்பாஷா நேரில் வந்து பாா்வையிட்டு சொன்னால்தான் திருடு போன பொருள்கள் விபரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவிக்கின்றனா்.

தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.