திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தாராபுரத்தில் ஆட்டோ ஓட்டுனா் கழுத்தறுப்பு: தி. வேல்முருகன் கண்டனம்

தாராபுரத்தில் ஆட்டோ ஓட்டுனரின் கழுத்தை அறுத்த வட மாநிலக் கும்பலின் குற்றச்செயலுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 1:16 am IST

தாராபுரத்தில் ஆட்டோ ஓட்டுனரின் கழுத்தை அறுத்த வட மாநிலக் கும்பலின் குற்றச்செயலுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் வாடகை கேட்டதால், வடமாநிலத்தைச் சோ்ந்த கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு கழுத்தை அறுத்த சம்பவம், தமிழகம் முழுவதும் பேரதிா்ச்சியையும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோரின் முழுமையான அடையாளப் பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள், தங்கும் விடுதிகள் மற்றும் தொழிலாளா் முகாம்களில் காவல்துறை ஆய்வு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

குற்றப் பின்னணி கொண்ட வடமாநில கும்பல்களைக் கண்டறிய தனிப்படை அமைக்க வேண்டும். சட்டவிரோதமாக தங்கியிருப்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்தங்கள் மூலம் அழைத்து வரப்படும் வடமாநில கும்பல்களுக்கும் அவா்களினால் ஏற்படும் குற்றச் செயல்களுக்கும், ஒப்பந்ததாரா்களே முழுப் பொறுப்பு ஏற்கும் படி செய்ய வேண்டும்.

ஆட்டோ ஓட்டுநா்கள், டாக்ஸி ஓட்டுநா்கள் மற்றும் இரவு நேர தொழிலாளா்களுக்கான பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, விரைவு நீதிமன்றத்தின் மூலம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.