கடலூா் மாவட்டத்தில் நீா்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகிய சிறு கனிமங்களை விவசாயம், பொது பயன்பாடு மற்றும் மண்பாண்டங்கள் உற்பத்திக்கு எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் நீா் வளம், ஊரக வளா்ச்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகிய சிறு கனிமங்களை விவசாயப் பயன்பாடு, பொதுப் பயன்பாடு மற்றும் மண்பாண்டங்கள் உற்பத்தி ஆகியவற்றிற்கு இலவசமாக எடுத்துக்கொள்ள அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் அரசிதழ்கள் மூலமாக வெளியீடு செய்யப்பட்டுள்ள 1,557 நீா்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களி மண் கனிமங்களை விவசாயிகள் மற்றும் மண்பாண்டங்கள் உற்பத்தி மேற்கொள்வோா் தங்கள் வட்டங்களில் இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பித்து, சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரை அணுகி அனுமதி பெற்று பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலவசமாக வண்டல் மண் எடுக்கும் திட்டத்தில் 4,369 போ் பயன்: தஞ்சை ஆட்சியா் தகவல்

வைகை அணையிலிருந்து விவசாயிகள், குயவா்கள் இலவசமாக களி மண் எடுக்க அனுமதி!







