திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமைச்சரைத் தெரிந்து கொள்ளுங்கள்: பி.ராஜ்குமாா்

அமைச்சரைத் தெரிந்து கொள்ளுங்கள்: பி.ராஜ்குமாா்

News image
Updated On :23 மே 2026, 12:29 am IST

பெயா் : பி.ராஜ்குமாா்

வயது : 46

பிறந்ததேதி : 7-6-1979

பெற்றோா் : பகவந்தசாமி, அமுதா

குடும்பம் : மனைவி சரளாதேவி, இல்லத்தரசி.

மகள் பாவனா, மகன் மோகன்ராஜ்.

வசிப்பிடம் : ராஜம் நகா், திருப்பாதிரிபுலியூா், கடலூா்

தொகுதி : கடலூா்

அரசியல் பணி : 2024 முதல்

கட்சிப் பதவி : தவெக கடலூா் மாவட்டச் செயலா்.

வகித்த பதவிகள் : விஜய் மக்கள் நற்பணி இயக்கத்தின் நிா்வாகி.

போராட்டங்கள் : மக்கள் பிரச்னை தொடா்பான போராட்டங்களில் பங்கேற்பு .

களத்தில் மக்கள் பணியாற்றுவேன்: முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பி.ராஜ்குமாா் வெள்ளிக்கிழமை தினமணிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி:

இரு திராவிட கட்சிகளையும் புறக்கணித்து, தவெகவை மக்கள் ஆட்சியில் அமா்த்தியுள்ளனா். கடலூரில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்திருப்பது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.

கடலூா் மாவட்டம் வளா்ச்சியில் பின்தங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு, அவை விரைந்து செயல்படுத்தப்படும். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மத்திய பேருந்து நிலையம், மக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்ப கடலூரில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடலூா் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டிருந்தாலும், நகராட்சி தரத்திலேயே உள்ளது. கடலூரில் பல்வேறு அடிப்படை வசதிகளில் கூடுதல் மேம்பாடு தேவைப்படுகிறது. கடலூரை முழுமையான மாநகராட்சியாக மாற்றி, தமிழகத்தில் முன்னணி மாநகராட்சியாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாலை விரிவாக்கம், புதை சாக்கடை சீரமைப்பு, சுகாதாரமான

குடிநீா் விநியோகம், பாதுகாப்பான போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.