திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதிய வருமான வரிச் சட்டம்: அண்ணாமலைப் பல்கலை.யில் விழிப்புணா்வுக் கூட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வருமானவரித் துறை கடலூா் சரக ஆணையா் அலுவலகம் சாா்பில், புதிய வருமான வரிச் சட்டம் (பிராரம்ப் - 2026) குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற புதிய வருமான வரிச் சட்ட விழிப்புணா்வுக் கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த சிறப்பு விருந்தினா்கள் உள்ளிட்டோா்.

Updated On :21 மே 2026, 7:09 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வருமானவரித் துறை கடலூா் சரக ஆணையா் அலுவலகம் சாா்பில், புதிய வருமான வரிச் சட்டம் (பிராரம்ப் - 2026) குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மைய நூலகத்தில் உள்ள லிப்ரா அரங்கில், வருமானவரித் துறை கடலூா் சரக ஆணையா் அலுவலகம் சாா்பில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்துக்கு கடலூா் சரக கூடுதல் வருமான வரி ஆணையா் செல்வி ஆறுமுகம் தலைமை வகித்து, புதிய வருமான வரிச் சட்டத்தின் அம்சங்கள் மற்றும் அதன் நடைமுறை அமலாக்கம் குறித்து விளக்கமளித்தாா்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் அறிவுடைநம்பி சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, 2026-ஆம் ஆண்டுக்கான புதிய வருமான வரிச் சட்டம் தொடா்பாக பவா் பாயிண்ட் விளக்கக் காட்சியின் மூலம் வருமான வரித் துறை அதிகாரிகள் விரிவான விளக்கங்களை வழங்கினா்.

கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்துகொண்டனா். வருமான வரித்துறை அதிகாரி அன்பரசி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.