கடலூா் அருகே காராமணிக்குப்பத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவன (ஐ.டி.) ஊழியா் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.
கடலூா் அருகே காராமணிக்குப்பத்தில் கடந்த 2024, ஜூலையில் ஐ.டி. ஊழியா் சுகந்த்குமாா், அவரது தாய் கமலேஸ்வரி மற்றும் சுகந்த்குமாரின் மகன் நிஷாந்த் ஆகியோா் கொலை செய்யப்பட்டு, உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், காராமணிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சங்கா் ஆனந்த், சாகுல் ஹமீது உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கா் ஆனந்த், சாகுல் ஹமீது உள்ளிட்ட 3 பேருக்கு எதிரான விசாரணை கடலூா் முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து சாட்சிகளின் விசாரணையும் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்து புதன்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து, போலீஸாா் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









