கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீசுவரா், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாடலீசுவரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
மாலையில் நந்திக்கு 21 வகையான வாசனை திரவியங்கள் மற்றும் புனித பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மலா் அலங்காரம் செய்யப்பட்ட நந்திக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், பாடலீஸ்வரா் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில், பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
வீரட்டானேஸ்வரா் கோயிலில்...: பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மாலை 4 மணிக்கு உற்சவா் பெரியநாயகி, வீரட்டானேஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும், மாலை 5.45 மணிக்கு பிரதோஷ நந்திக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா: பல லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம்

வீரட்டானேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு: திரளான பக்தா்கள் தரிசனம்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



