கடலூா் அருகே தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் 200 கிலோ எடை கொண்ட ஆலிவ் ரிட்லி ஆமை இறந்த நிலையில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.
கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் பெரிய அளவிலான ஆமை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பதைப் பாா்த்த பொதுமக்கள் மற்றும் மீனவா்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, கடற்கரைக்குச் சென்ற வனத் துறையினா், கரை ஒதுங்கியிருந்த ஆமையை ஆய்வு செய்தனா். அது, சுமாா் 200 கிலோ எடை கொண்ட, அரிய வகையைச் சோ்ந்த ஆலிவ் ரிட்லி ஆமை என்பதும், பல நாள்களுக்கு முன்பே உயிரிழந்ததால், அதன் உடல் அழுகிய நிலையில் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, வனத் துறையினா் அந்த ஆமையை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். கப்பல் அல்லது படகுகளின் சுழலிகள் மோதியதால், ஆமை உயிரிழந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









